Friday, February 3, 2012

1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பௌத்தக் களப்பணி தொடர்பான அனுபவங்கள் பல தலைப்புகளில் http://tamilindru.blogspot.com/ என்ற வலைப்பூவில் வெளியாகியுள்ளன. என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முதலில் களம் அமைத்துத் தந்த தமிழ் இன்று வலைப்பூவிற்கு என் மனமார்ந்த நன்றி. ஆர்வமுள்ளோர் தேவையான தலைப்புகளைத் தெரிவு செய்து, படித்து, கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
நாளிதழ்களில் வந்த செய்திகளைத் தவிர பௌத்தம் தொடர்பாக வெளியான கட்டுரைகள்/கண்டுபிடிப்புகள்  அதன்கீழ் தரப்பட்டுள்ளன.


1) பௌத்தச் சுவட்டைத் தேடி அறிமுகக்கட்டுரை (29.5.2010)
ஆய்வில் இறங்கும் முன்பாக நான் எதிர்கொண்ட சூழல்.

2)அம்மண சாமியப் பாக்க வந்தீங்களா? (12.6.2010)
வேதாரண்யத்தில் முன்பு பார்த்த புத்தர் சிற்பம் காணாமல் போன வருத்தமான அனுபவம்.

3) அந்த புத்தர் எந்த புத்தர்?  (31.7.2010)
பட்டீஸ்வரம் பகுதியில் பல இடங்களில் புத்தர் சிற்பங்கள் உள்ளன. இருப்பினும் இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் புத்தர் சிற்பத்தை முந்தைய அறிஞர்கள் சொன்ன கூற்றுகளின்படி தேடி, கண்டுபிடித்தபோது பெற்ற  மாறுபட்ட அனுபவம்.

4) புத்தர் அல்ல, கும்பகோணம் பகவர் (21.8.2010)
கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலுள்ள சிற்பத்தை மயிலை சீனி.வேங்கடசாமி புத்தர் என்று கூறுகிறார். நேரில் களப்பணி மேற்கொண்ட போது சிற்ப அமைப்பின்படி அது புத்தர் அல்ல என்பதை உறுதிசெய்யும் வகையில் பெற்ற அனுபவம்.

5) நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் (13.11.2010)
பௌத்த ஆய்வின்போது சோழ நாட்டில் 60-க்கும் மேற்பட்ட புத்தர் சிற்பத்தைக் கண்டுபிடித்ததோடு மட்டுமன்றி, தமிழகத்திலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களைப் பெறும் முயற்சியின்போது கிடைத்த அனுபவம்.

பௌத்தம் கட்டுரைகள்/கண்டுபிடிப்புகள்  (நாளிதழ்கள் தவிர)

1.‘‘தஞ்சை, நாகை மாவட்டங்களில் புத்த மதச் சான்றுகள்’’, தமிழ்க்கலை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ் 12, கலை 1-2, பக்.98-102
2.‘‘குடந்தையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத்தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், துணர் 70, மலர் 1, மே 1996, பக்.98-102
3.‘‘குடந்தையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், துணர் 70, மலர் 8, ஜனவரி 1997, பக்.905-912
4.‘‘இந்து மதத்தில் புத்த மதத்தில் தாக்கம்’’ , தமிழியல் ஆய்வு, (ப.ஆ:  முனைவர் இரா.காசிராசன் மற்றும் பலர்), ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, 1997,  பக்.147-151
5.“சைவமும் பௌத்தமும்”, ஆறாம் உலகச்சைவ மாநாடு, ஆய்வுச்சுருக்கம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1997, ப.88
6.‘‘தஞ்சையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், துணர் 72, மலர் 1, மே 1998, பக்.3-8
7.“பௌத்தத்தில் மனித நேயம்”, மனிதநேயக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், ஆகஸ்டு 1998
8.‘‘மும்பை அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்’’, தமிழ்ப்பொழில், துணர் 73, மலர் 3, ஜூலை 1999, பக்.95-98
9.“கல்கத்தா அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்”, ஆய்வுமணி, (ப.ஆ: துரை.குணசேகரன்), தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை, மயிலாடுதுறை, 2001, பக்.160-166
10.“சம்பந்தரும் பௌத்தமும்”, திருஞானசம்பந்தர் ஆய்வு மாலை, (ப.ஆ: த.கோ.பரமசிவம் மற்றும் பலர்), திருஞானசம்பந்தர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2002, பக்.654-662
11.‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-வழிபாடும் நம்பிக்கைகளும்’’, தமிழ்ப்பொழில், துணர் 76, மலர் 5, நவம்பர் 2002, பக்.695-702
12.‘‘பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், மார்ச் 2002, ப.3
13.‘‘பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 13, 2002, ப.185
14.“காவிரிக்கரையில் பௌத்தம்”, கல்கி தீபாவளி மலர், 2002, பக்.162-163
15.‘‘திருநாட்டியத்தான்குடியில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், பிப்ரவரி 2003, ப.3
16.“தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம்”, எத்தனம், (ப.ஆ: ஆ.சண்முகம்),  அன்னம், தஞ்சாவூர்,  2002, பக்.137-137, ஜூன் 1998இல் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
17.‘‘திருநாட்டியத்தான்குடியில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, ஜூலை 2003, ப.16
18.‘‘திருநாட்டியத்தான்குடி புத்தர் சிலை’’, ஆவணம், 14, 2003, ப.145
19.‘‘புத்தர் என்றழைக்கப்படும் சமணர்’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், ஜூலை 2003, ப.3
20.‘‘புத்தர் என்றழைக்கப்படும் சமணர்’’, பௌர்ணமி, அக்டோபர் 2003, பக்.20-21
21.“நாவுக்கரசரும் பௌத்தமும்”, திருநாவுக்கரசர் ஆய்வு மாலை, (ப.ஆ: த.கோ.பரமசிவம் மற்றும் பலர்), திருநாவுக்கரசர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2003, பக்.738-743
22.“புதைந்துபோன புத்தர் வரலாறு :சோழ நாட்டில் புத்தர் சிலைகள்- பேட்டவாய்த்தலை”, பௌர்ணமி, டிசம்பர் 2003, ப.13
23.“நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்”, வரலாற்றுச்சுடர்கள், (ப.ஆ: கவிமாமணி கல்லாடன்),  குழலி பதிப்பகம், பாண்டிச்சேரி, 2003, பக்.63-69
24.“புதைந்துபோன புத்தர் வரலாறு :சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-ஒகுளூர்”, பௌர்ணமி, ஜனவரி 2004, ப.14
25.“புதைந்துபோன புத்தர் வரலாறு :சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-ஆயிரவேலி அயிலூர்”, பௌர்ணமி, அக்டோபர் 2004, பக்.12-13
26.“புத்தர் சிலை கண்டுபிடிப்பு”, செய்திச்சோலை, ஏப்ரல் 2005, ப.24
27.“புத்துயிர் பெறும் பௌத்தம்:சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-அய்யம்பேட்டை, ஆலங்குடிப்பட்டி, இடும்பவனம்”, பௌர்ணமி, ஆகஸ்டு 2005, ப.5
28.“உள்ளிக்கோட்டை புத்தர் சிலை”, ஆவணம், 17, 2006, பக்.220-221
29.“பெரம்பலூர் மாவட்டம் குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, கணையாழி, ஆகஸ்டு 2006. ப.61
30.“புத்தர் சிலை கண்டுபிடிப்பு”, குமுதம் தீராநதி, செப்டம்பர் 2006,ப.2
31.“குழுமூர் புத்தர் சிலை”, ஆவணம், 18, 2007, ப.196
32.“வளையமாபுரத்தில் புத்தர் சிலை, ரசனை, மார்ச் 2008, ப.12
33.‘‘பெரம்பலூர் மாவட்டம் குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், ஆகஸ்டு 2008, ப.4
34.‘‘சோழ நாட்டில் களப்பணியில் கண்ட புத்தர் சிலைகள் (1998-2007)’’, தமிழ்க்கலை, தமிழ் 13, கலை 1, செப்தம்பர்-திசம்பர் 2008, பக்.31-36
35."Buddha Statues in the vicinity of other Temples in the Chola country", Tamil Civilization, Tamil University, Thanjavur, Vol No.19, September 2008, pp.15-23
36.‘‘திருவாரூர் மாவட்டம் வளையமாபுரத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், நவம்பர் 2008, ப.4
37.‘‘வளையமாபுரத்தில் புத்தர் சிலை’’, ஆவணம், 19, 2008, பக்.226-227
38.‘‘திருச்சி காசாமலையில் புத்தர் சிலை’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர்,  டிசம்பர் 2008, ப.4
39.‘‘திருச்சியில் புத்தர் சிலை’’, ஆவணம், 20, 2009, ப.205
40.‘‘சோழ நாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை’’, தமிழ்க்கலை, தமிழ் 14, கலை 3, ஏப்ரல் 2009, பக்.29-32
41.“தஞ்சை அருகே 11ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பத்தை வழிபடும் மக்கள், முக்குடை, ஜூலை 2009, ப.20 
42."A Resurvey of Buddha Statues in Pudukkottai Region (1993-2009)", Tamil Civilization,Vol No.23,October-December 2009, pp.62-68
43.“தஞ்சை அருகே தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு, முக்குடை, ஏப்ரல் 2010, ப.29 
44.“செருமாக்கநல்லூரில் சமணர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், மே 2010, ப.4
45.“நாகப்பட்டின மாவட்டத்தில் புத்தர் சிலைகள்”, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை, ஆய்வரங்கச் சிறப்பு மலர்,  2010,பக்.687-688
46.“பௌத்தம் வளர்த்த தமிழ்”, தினமணி செம்மொழிக்கோவை, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர்,  பக்.237-240
47.“பௌத்தம் போற்றும் மனித நேயம்”, செம்மொழி மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், 2010, பக்.188-190
48.“வேதாரணியம் அருகே சமணர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், செப்டம்பர் 2010, ப.2
49.‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-வழிபாடும் நம்பிக்கைகளும்’’, தமிழக நாட்டுப்புற ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2010, பக்.134-139
50.“சோழ நாட்டில் புத்தர் செப்புத்திருமேனிகள்”, தினமணி, புத்தாண்டு சிறப்பிதழ் 2011, ப.54
51.“பௌத்தம் போற்றும் மனித நேயம்”, கரந்தைத்தமிழ்ச்சங்க நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், 2011, பக்.179-181
52.“தஞ்சை அருகே மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு, முக்குடை, டிசம்பர் 2011, ப.20

No comments:

Post a Comment